tamilnadu

img

மாணவர்களுக்கு கத்தியைப் பரிசளித்த இந்து மகாசபை

ஆக்ரா:
சாவர்க்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில், இந்து மகா சபையினர், மாணவ - மாணவியர்களுக்கு கத்தியை பரிசளித்து, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில்தான், இச்சம்பவம் நடந்துள்ளது. இங்கு நடைப்பெற்ற சாவர்க்கர் பிறந்தநாள் விழாவில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு, அகில பாரத இந்து மகா சபையினர் கத்தியை பரிசளித்துள்ளனர்.

“இந்து ராஜ்யத்தை அமைப்பதே சாவர்க்கரின் கனவு எனவும் பிரதமர் மோடி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதன் மூலம் அவரது முதல் கனவை நனவாக்கியுள்ளார்” எனவும் நிகழ்ச்சியின்போது, இந்து மகா சபையின் செய்தித் தொடர்பாளர் அசோக் பாண்டே கூறியிருக்கிறார்.

இந்தியாவில், இந்துத்துவா என்ற வகுப்புவாத அரசியலை துவக்கி வைத்தவர்களில் சாவர்க்கரும் ஒருவராவார். மகாத்மா காந்தியைப் படுகொலை செய்த கோட்சேவுக்கு இவர்தான் குரு. காந்தி கொலைக்கு சதித்திட்டம் தீட்டி அளித்ததே சாவர்க்கர்தான் என்றும் கூறப்படுவது உண்டு. அதற்காக கைதும் செய்யப்பட்டவர்தான் சாவர்க்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

;